லக்னௌ: வாக்குப்பதிவெல்லாம் முடிந்த பிறகு நல்ல நாள் வந்ததும் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதா என்று சமாஜ்வாதித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
மக்கள் அனைவரும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள், பிரதமர் தேர்தலுக்குப் பிறகு அவர் சொல்லும் நல்ல நாள் வந்ததும் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளாரா? என்று. நல்ல நாள் வருகிறது என்று தற்போது பாஜக தொண்டர்கள் கூட தங்களுக்குள் கூறிக் கொள்வதில்லை. அப்படியிருக்க நாட்டு மக்கள் எப்படி அதைக் கூறுவார்கள்? என்று அகிலேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவின் கவுண்டவுன் தொடங்கி விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.