இந்தியா

பிரசாரத்துக்கு முன் பாபநாசத்தில் ராகுல் பூஜை: கேரளா காங்கிரஸ்

ANI

வயநாடு பிரசாரத்துக்கு முன் பாபநாசம் கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பூஜை செய்ய வாய்ப்புள்ளதாக கேரள காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், வியாழக்கிழமை (ஏப்.4) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 இதுகுறித்து கேரள காங்கிரஸ் தலைவர்கள் ரமேஷ் சென்னிதலா கூறுகையில்,

பிரதமர் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவரது அஸ்தியின் ஒரு பகுதி திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம் ஆற்றில் கரைக்கப்பட்டது. அச்சமயம் அப்போதைய கேரள முதல்வர் கே. கருணாகரன், முல்லபல்லி ராமச்சந்திரன் மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் அந்த அஞ்சலியை செலுத்தும் நிகழ்வில் பங்கேற்றனர் என்றார். 

இந்நிலையில், வயநாடு பிரசாரத்தை தொடங்கும் முன்பு பாவங்களைப் போக்கும் பாபநாசம் கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல், சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கேரள காங்கிரஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT