இந்தியா

கருணாநிதியை 2 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைத்திருந்தார் ஸ்டாலின்: முதல்வர் பழனிசாமி

DIN


நீலகிரி: திமுக தலைவர் கருணாநிதியை தனது சுயநலத்துக்காக 2 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைத்திருந்தார் ஸ்டாலின் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி தொகுதியில் இன்று அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் முதல்வர் பழனிசாமி.

அப்போது அவர் கூறியதாவது, அரசியலில் தனக்கு முக்கியத்துவம் ஏற்பட வேண்டும் என்பதற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறையில் வைத்திருந்தார் ஸ்டாலின். கருணாநிதிக்கு உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவர் நன்றாகப் பேசியிருப்பார். இதனை நாங்கள் சொல்லவில்லை, அவரது கட்சியினரே சொல்கிறார்கள். 

கருணாநிதிக்கு ஏற்பட்ட நிலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும் என்று பழனிசாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT