சத்தீஸ்கரில் 34 நக்ஸலைட்டுகள் எஸ்பி மார்வி முன்பு சரண்
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 34 நக்ஸலைட்டுகள் போலீஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 34 நக்ஸலைட்டுகள் போலீஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
11 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. சுக்மா மாவட்டத்தில் உள்ள பஸ்தர் மக்களவைத் தொகுதி, நக்ஸல் அச்சுறுத்தல் மிகுந்த பகுதியாக இருப்பதால், தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு படையினர் அந்த பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சுக்மா மாவட்டத்தில் சில நக்ஸலைட்டுகளின் ஒரு பிரிவினர் சரணடைய தயாராக இருப்பதாகவும், தங்களுக்கு புனர்வாழ்வு தரும்படியும் காவல் கண்காணிப்பாளர் பி.எஸ் மார்வியிடம் கோரிக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதில் சில நக்ஸலைட்டுகள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில நக்ஸலைட்டுகளின் தலைக்கு போலீஸார் சன்மானம் அறிவித்திருந்தனர்.
Advertisement
இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை (ஏப் 8) 3 பெண் நக்ஸல்கள் உள்பட 34 நக்ஸல்கள் காவல் கண்காணிப்பாளர் பி.எஸ் மார்வி முன்பு சரணடைந்தனர்.
மக்களவைத் தேர்தல் நேரத்தில் நக்ஸல்கள் சரணடைந்திருப்பது மனநிறைவைத் தருவதாக எஸ்பி பி.எஸ் மார்வி கூறியுள்ளார்.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி சுக்மா மாவட்டத்தின் கர்கான்குடா கிராமத்துக்கு அருகேயுள்ள வனப்பகுதியில் நக்ஸல்களும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நந்த மோதலில், நக்ஸல்கள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் மறைந்திருந்த இடத்தில் இருந்து இன்சாஸ் ரக துப்பாக்கி உள்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
Chhattisgarh: 34 naxals surrendered before the police in Sukma yesterday.