இந்தியா

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்திருக்கும் அறை தொடர்பாக நிஜாமாபாத் வேட்பாளரின் வினோத வேண்டுகோள்   

வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாத்து வைத்திருக்கும் அறை தொடர்பாக தெலங்கானா   மாநில பாஜக வேட்பாளர் ஒருவர் வினோத வேண்டுகோள் வைத்துள்ளார்.

DIN

ஹைதராபாத்: வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாத்து வைத்திருக்கும் அறை தொடர்பாக தெலங்கானா   மாநில பாஜக வேட்பாளர் ஒருவர் வினோத வேண்டுகோள் வைத்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் தெலங்கானாவில் உள்ள நிஜாமாபாத் தொகுதி ஒரு வித்தியாசமான காரணத்தால் புகழ்பெற்றது. அந்த தொகுதியில் போட்டியிட்ட 185 வேட்பாளர்களுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 12 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. இது ஒரு சாதனையாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாத்து வைத்திருக்கும் அறை தொடர்பாக நிஜாமாபாத் தொகுதி பாஜக வேட்பாளர் ஒருவர் வினோத வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுதொடர்பாக நிஜாமாபாத் தொகுதி பாஜக வேட்பாளர் அரவிந்த் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய   வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு நான் கொடுக்கும் பூட்டையும் பயன்படுத்தி பூட்ட  வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இது அங்குள்ள அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்காணிப்பு கேமிரா

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்!

மீன்பிடி படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழப்பு

உரிய நேரத்தில் வாக்காளா் பட்டியல்களை சில கட்சிகள் ஆராயவில்லை: தோ்தல் ஆணையம்

ஜம்மு - காஷ்மீா் பெருவெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT