இந்தியா

மறுக்கப்பட்ட நிதியுதவி: முழுமையாக சேவையை நிறுத்திய ஜெட் ஏர்வேஸ் 

DIN

புது தில்லி: புதிதாய் முதலீட்டாளர்கள் யாரும் நிதியுதவி அளிக்க மறுத்து விட்ட காரணத்தால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்  முழுமையாக சேவையை நிறுத்தி விட்டது.

சமீப காலமாக கடன் சுமையால் பாதிப்படைந்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் படிப்படியாக தனது சேவையை துண்டிக்க தொடங்கியது. ஒருகட்டத்தில் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்த நிலையில், அந்த நிறுவனம் வங்கிகளிடம் கடன் கோரியது.

ஆனால் அது கேட்ட முதல்கட்ட ரூ. 400 கோடி கடன் கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதைத்த தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

மும்பையிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸுக்கு செல்லும் விமான சேவைதான் கடைசியாக இருக்கும் என அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 5 விமானங்களை மட்டுமே அந்த நிறுவனம் இயக்கி வந்தது என்பது இங்கே  குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT