இந்தியா

மறுக்கப்பட்ட நிதியுதவி: முழுமையாக சேவையை நிறுத்திய ஜெட் ஏர்வேஸ் 

புதிதாய் முதலீட்டாளர்கள் யாரும் நிதியுதவி அளிக்க மறுத்து விட்ட காரணத்தால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்  முழுமையாக சேவையை நிறுத்தி விட்டது.

DIN

புது தில்லி: புதிதாய் முதலீட்டாளர்கள் யாரும் நிதியுதவி அளிக்க மறுத்து விட்ட காரணத்தால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்  முழுமையாக சேவையை நிறுத்தி விட்டது.

சமீப காலமாக கடன் சுமையால் பாதிப்படைந்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் படிப்படியாக தனது சேவையை துண்டிக்க தொடங்கியது. ஒருகட்டத்தில் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்த நிலையில், அந்த நிறுவனம் வங்கிகளிடம் கடன் கோரியது.

ஆனால் அது கேட்ட முதல்கட்ட ரூ. 400 கோடி கடன் கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதைத்த தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

மும்பையிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸுக்கு செல்லும் விமான சேவைதான் கடைசியாக இருக்கும் என அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 5 விமானங்களை மட்டுமே அந்த நிறுவனம் இயக்கி வந்தது என்பது இங்கே  குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT