இந்தியா

சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த எம்.பி.

PTI


புது தில்லி: வடமேற்கு தில்லி தொகுதி பாஜக எம்பியான உதித் ராஜுக்கு மீண்டும் சீட் ஒதுக்கப்படாததால், அதிருப்தி அடைந்து இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

இன்று காலை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உதித் ராஜ் கட்சியில் இணைந்துள்ளார்.

இவர் போட்டியிட்டு வென்ற வடமேற்கு தொகுதியில் பஞ்சாபி சூஃபி பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தலித் பாதுகாப்புச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் செல்லாததாக்கிய உத்தரவுக்கு எதிராக தான் போராடிய காரணத்தால்தான், தனக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை என்று அவர் நேற்று தெரிவித்திருந்தார்.

இதுபோல சபரிமலை உள்ளிட்ட சில விவகாரங்களிலும், கட்சியின் கொள்கைகளுக்கு இவர் முரண்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT