முகப்பு
இந்தியா

எனக்கு மோடியின் ஜாதி கூட தெரியாது: பிரியங்கா வதேரா

எனக்கு மோடியின் ஜாதி எதுவென்றே தெரியாது என்று உ.பி. காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா வதேரா கூறியுள்ளார். 

Updated On : 28 ஏப்ரல், 2019 at 5:57 PM
பகிர்:

எனக்கு மோடியின் ஜாதி எதுவென்றே தெரியாது என்று உ.பி. காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா வதேரா கூறியுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவரும், சகோதரருமான ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நமது நாட்டின் பிரச்னைகள் மிகத் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை மிகவும் பின்தங்கியுள்ளது. தேசியவாதம் என்பது மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதாக இருக்க வேண்டும். ஆனால், பாஜக அரசு மக்களின் பிரச்னைகளை என்றும் கேட்டதில்லை. 

அதையும் மீறி மக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து போராடினால், அவர்களை இந்த அரசு ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. எனவே இது ஜனநாகமும் கிடையாது. இதில் தேசியவாதமும் இல்லை.

Advertisement

பணம், புடவை மற்றும் காலணி உள்ளிட்டவைகளை பாஜக வேண்டுமென்றே ஊடகத்தின் முன் மக்களுக்கு வழங்கி தேர்தலை சந்திக்கிறது. நான் இங்கு 12 வயதிலிருந்து வருகிறேன். எங்கள் தொகுதிகளான அமேதி மற்றும் ரேபரேலி மக்கள் பெருமைக்குரியவர்களாகவே இருந்து வருகின்றனர். எனவே அமேதி தொகுதி மக்கள் என்றும், யாரிடமும் பிச்சை கேட்டது இல்லை. 

காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் மக்களின் வளர்ச்சி தொடர்பாக மட்டுமே எதிர்கட்சிகளை விமர்சித்து வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடி குறித்து எந்தவொரு தனிப்பட்ட விமர்சனங்களும் செய்ததில்லை. எனக்கு இன்று வரை பிரதமர் நரேந்திர மோடியின் ஜாதி எதுவென்று கூட தெரியாது என்று தெரிவித்தார். 

முன்னதாக, அமேதி தொகுதியில் காலணி இல்லாத மக்களுக்கு அதனை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.