புதுதில்லி: இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்தின் குடியுரிமையையும் ராகுல் பெற்றுள்ளதாக சுப்பிரமணியசுவாமி என்பவர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்தின் குடியுரிமை குறித்து 2 வாரங்களில் தெளிவான விளக்கம் தரும்படி மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.