இந்தியா

மொத்தவிலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் ஜூலையில் சரிவு

DIN


மொத்தவிலைக் குறியீட்டு எண் (டபிள்யூ.பி.ஐ.) அடிப்படையிலான பணவீக்கம், கடந்த ஜூலை மாதம் 1.08 சதவீதமாகக் குறைந்தது. இது கடந்த 25 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைவான அளவாகும்.
இது தொடர்பான அறிக்கையை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மொத்தவிலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 2.02 சதவீதமாகவும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 5.27 சதவீதமாகவும் இருந்தது. இந்நிலையில், தற்போது 1.08 சதவீதமாக இது குறைந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தப் பணவீக்கம் 0.9 சதவீதமாக இருந்தது.
மொத்தவிலைக் குறியீட்டு எண் அளவீட்டில் 15 சதவீதப் பங்கு வகிக்கும் உணவுப் பொருள்களின் பணவீக்கம், கடந்த ஜூலை மாதத்தில் 6.15 சதவீதமாகக் குறைந்தது. இது, கடந்த ஜூன் மாதத்தில் 6.98 சதவீதமாக இருந்தது. உருளைக் கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்ததே பணவீக்கம் குறைந்ததற்கான காரணமாகும்.
அதே வேளையில், பழங்களின் விலை சற்று அதிகரித்துக் காணப்பட்டது. எரிபொருள் மற்றும் எரிசக்திக்கான பணவீக்கமும், கடந்த ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் கடந்த மாதம் குறைந்து காணப்பட்டது. தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களின் பணவீக்கம் கடந்த ஜூன் மாதம் 0.94 சதவீதமாகக் காணப்பட்டது. இது கடந்த மாதத்தில் 0.34 சதவீதமாகக் குறைந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், அத்தியாவசியப் பொருள்களின் விலையில் பெரிதாக மாற்றம் ஏற்படாமல் உள்ளதால், பணவீக்கமும் மந்தநிலையிலேயே காணப்படுகிறது. சில மாதங்களுக்கு இதே நிலையே தொடர்ந்தாலும், இது தற்காலிகமானது என்றே கருதுகிறோம். உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரிக்கும் என நம்புகிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT