தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நலம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி வெள்ளிக்கிழமை விசாரித்தார்.
உடல் நலக் குறைவால் கடந்த 9-ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜேட்லி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னதாக, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், பிகார் துணை முதல்வர் சுஷீல் குமார் மோடி, பாஜக மூத்த தலைவர் மேனகா காந்தி உள்ளிட்டோர் ஜேட்லியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.