இந்தியா

அம்பேத்கர் வழியில் 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்கு ஆதரவளித்தோம்: மாயாவதி

எதிர்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஜம்மு-காஷ்மீர் செல்வதற்கு முன்பு சற்று யோசித்திருக்க வேண்டும் என மாயாவதி தெரிவித்தார். 

DIN

எதிர்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஜம்மு-காஷ்மீர் செல்வதற்கு முன்பு சற்று யோசித்திருக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீர் செல்வதற்கு முன்பு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் சற்று யோசித்திருக்க வேண்டும். இதன்மூலம் அவர்கள் ஆளும் மத்திய பாஜக அரசுக்கும், ஜம்மு-காஷ்மீர் ஆளுநருக்கும் அரசியல் செய்ய இடமளித்துள்ளனர். 

அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றுவது தான் பகுஜன் சமாஜ் கட்சியின் பிரதான கொள்கை. அம்பேத்கர் எப்போதுமே சமத்துவத்தை விரும்பியவர். ஆதலால் தான் அவர் ஜம்மு-காஷ்மீருக்கு 370 சிறப்பு சட்டப்பிரிவு ஏற்படுத்த மறுப்பு தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல் எதிர்ப்பும் தெரிவித்தார்.

அதனால் தான் பகுஜன் சமாஜ் கட்சியும் மத்திய அரசின் இம்முடிவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்தது. சுமார் 69 ஆண்டுகளாக அமலில் இருந்த சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளதால், ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலை திரும்ப மேலும் சில காலம் ஆகும். அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT