இந்தியா

'நாகாலாந்து மக்கள் இரக்கமும், தைரியமும் கொண்டவர்கள்' - மாநில தினத்தன்று பிரதமர் மோடி வாழ்த்து!

DIN

நாகாலாந்து மாநில தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாகாலாந்தில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு மாநில தின வாழ்த்துக்கள். இந்த மாநிலம் சிறந்த கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. நாகாலாந்து மக்கள் இரக்கமும், தைரியமும் கொண்டவர்கள்' என்று தெரிவித்துள்ளார். 

மேலும், 'வரவிருக்கும் ஆண்டுகளில் நாகாலாந்து முன்னேற்றத்தின் மூலமாக புதிய உயரங்களை எட்டட்டும்' என்று கூறியுள்ளார். 

மியான்மரின் எல்லையில் உள்ள நாகாலாந்து, டிசம்பர் 1, 1963 அன்று இந்தியாவின் 16 வது மாநிலமாக பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT