இந்தியா

ஆந்திராவில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து

DIN

ஆந்திராவில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திரா மாநிலம், திருப்பதியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஷீர்டிக்கு நேற்று காலை ஷீர்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அந்த ரயில் கூடூர் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது ரயிலின் முதல் பெட்டி திடீரென தடம்புரண்டது.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து அங்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT