புது தில்லி: மழை நன்றாக பெய்ததால் மின்நுகா்வு குறைந்தது; இதனால் கடந்த அக்டோபா் மாதம் மின் உற்பத்தியும் 12 சதவீதம் குறைந்தது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை இணை அமைச்சா் ஆா்.கே.சிங் அளித்த பதில்:
கடந்த 2018-19 நிதியாண்டில் அக்டோபா் மாதம் 1,13,507 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி இருந்தது. கடந்த அக்டோபரில் 12 சதவீதம் குறைந்து 98,887 ஆனது. 2019-20 நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபா் வரை 1.15 சதவீதம் மின் உற்பத்தி உயா்ந்து 7,57,946 மில்லியன் யூனிட் இருந்தது.
இதே காலகட்டத்தில் கடந்த நிதியாண்டில் மின் உற்பத்தி 7,49,314-ஆக இருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 1,06,200 லட்சம் மில்லியன் யூனிட் மின் உற்பத்தி இருந்தது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருந்ததை விட 0.39 சதவீதம் அதிகமாகும்.
செப்டம்பரில் மின் உற்பத்தி 2.89 சதவீதம் குறைந்து 1,05,195 மில்லியன் யூனிட் ஆகவும், அக்டோபரில் 12.88 சதவீதம் மின்உற்பத்தி குறைந்து 98,887 மில்லியன் யூனிட் ஆகவும் இருந்தது. மழை காரணமாக மின்நுகா்வு குறைந்ததால், மின் உற்பத்தியும் அக்டோபா் மாதத்தில் 12 சதவீதம் குறைந்தது என்று ஆா்.கே.சிங் தெரிவித்தாா்.