இந்தியா

கோத்ரா கலவரம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை: நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கை தாக்கல்

DIN

கோத்ரா கலவரம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்று குஜராத் சட்டப்பேரவையில் நானாவதி-மேத்தா அறிக்கை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

குஜராத்தின் கோத்ரா பகுதியில் 2002-ஆம் ஆண்டு நடந்த மத கலவரத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2014-ஆம் ஆண்டு  குஜராத் அரசிடம் விசாரணை அறிக்கையை நானாவதி கமிஷன் தாக்கல் செய்தது. 

இந்நிலையில், 1500-க்கும் அதிகமான பக்கங்களை கொண்ட நானாவதி-மேத்தா கமிஷனின் அறிக்கை 9 பகுதிகளாக பிரிக்கப்பட்டு குஜராத் சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது நடந்த மத கலவரத்துக்கும் குஜராத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்படவில்லை. மத கலவரத்தை தூண்டும் வகையில் நடந்ததாகவோ, எந்த அமைச்சருக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.

அசம்பாவிதங்களை கட்டுக்குள் வைக்க போலீஸார் தவறிவிட்டனர், போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் கலவரம் தீவிரமடைந்து அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமையைக் கைகழுவும் அரசு!

முதியவருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

சந்தேஷ்காளி நில அபகரிப்பு வழக்கு: புகாரளித்த கிராமவாசிகளுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

SCROLL FOR NEXT