இந்தியா

பள்ளிச் சிறுமிகளை கிண்டல் செய்தவரை கவனித்த பெண் போலீஸ் - வைரலாகும் விடியோ

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுமிகளை கிண்டல் செய்தவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸார் சரமாரியாகத் தாக்கினார்.

பிதூர் எனுமிடத்தில் நடத்த இச்சம்பவத்தில், தாய் மற்றும் சகோதரிகள் உனக்கு இல்லையா? என்று கேள்வி எழுப்பியபடி தனது செருப்பை கொண்டு அடித்தார்.

அப்பள்ளியின் அருகே மாணவிகளுக்கு சிலர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் எங்களுக்கு புகார் அளிக்கப்பட்டது. எனவே உடனடியாக அந்த பள்ளி அருகே பாதுகாப்பை பலப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுத்தோம். கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கான்பூர் எஸ்.பி. அனில் குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT