இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல்

DIN

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டியுள்ள இந்திய நிலைகளைக் குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. 

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இன்று பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டியுள்ள இந்திய நிலைகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் மற்றும் கிருஷ்ணா காதி செக்டார் பகுதிகளில் தாக்குதல் நடைபெற்று வருகிறது

சிறிய ஆயுதங்கள் மற்றும் மோட்டார் குண்டுகளை வீசி பாகிஸ்தான் துருப்புக்கள் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில் இந்தத் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் இருந்தும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT