இந்தியா

மும்பை தொழிற்சாலையில் தீ விபத்து: இரு உடல்கள் மீட்பு

DIN

மும்பையில் இயங்கி வரும் தொழிற்சாலை ஒன்றில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கிய இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கத்கோபர் எனும் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலை ஒன்றில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் 15 பேர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தொழிற்சாலையில் சிக்கிய ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதனை முழுமையாக அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காணாமல் போன இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என மும்பை தீயணைப்புத்துறை துணை அதிகாரி விஜயகுமார் பனிக்கிரஹி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT