முகப்பு
இந்தியா

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட அரசு திட்டமா?: வெளியாகியுள்ள விளக்க அறிக்கை 

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இந்தியா

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட அரசு திட்டமா?: வெளியாகியுள்ள விளக்க அறிக்கை 

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:09 AM
பகிர்:

புது தில்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான  பி.எஸ்.என்.எல்லும் ஒன்று. சமீபமாக பி.எஸ்.என்.எல். -ஐ  மூட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் பரவியது. சில ஊடகங்களிளும் சமூக வலைதளங்களிலும் இந்த தகவல் அதிக அளவில் பரவியது. இதன் காரணமாக பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூட இருப்பதாக தற்போது சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இதுபோன்ற எந்த ஒரு திட்டமும் அரசிடம் தற்போது பரிசீலனையில் இல்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →