இந்தியா

புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை:  மார்ச் 1-ம் தேதி முதல் அமல் 

தமிழகத்தை தொடந்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

புதுச்சேரி: தமிழகத்தை தொடந்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு  தடிமன் வரை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு, கடந்த 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அது கூடுமானவரை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.  

இந்நிலையில் தமிழகத்தை தொடந்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூடி முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிப்பது என்றும், இந்த தடையானது வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும்  முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT