இந்தியா

அந்தமான் நிகோபரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

DIN

அந்தமான் நிகோபர் தீவுகளில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 
இதுகுறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்ததாவது: காலை 8.43 மணியளவில் இந்த நிலநடுக்கம் நிகோபர் தீவுப்பகுதியை  மையமாக கொண்டு ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் இது 6 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எவ்வித உயிரிழப்புகளோ அல்லது பொருள் இழப்போ ஏற்படவில்லை  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (இன்காய்ஸ்) இயக்குநர் எஸ்பிஎஸ்.ஷெனாய் கூறுகையில், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடல் மட்டத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.  இன்காய்ஸ் நிறுவனம் நிலநடுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு புதிதாக உருவாகும் சுனாமி குறித்தும், கடல் மட்ட உயர்வு குறித்தும் ஆய்வு மேற்கொண்டு  சுனாமி எச்சரிக்கை விடும் அமைப்பாகும். இந்தியா மட்டுமின்றி சுனாமி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள அண்டைய நாடுகளுக்கும் சுனாமி குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கக்கூடிய அமைப்பாகவும் திகழ்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT