இந்தியா

நேரடி வரி வருவாய் உயர்ந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% உயர்ந்துள்ளது என்று மத்திய நிதித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

DIN

5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% உயர்ந்துள்ளது என்று மத்திய நிதித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பட்ஜெட்டில் அவர் கூறியிருப்பதாவது, 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% உயர்ந்துள்ளது. நேரடி வரி வருவாய் ரூ.6.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

5 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளோருக்கு வருமான வரி இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

கடனில் வாங்கப்படும் மின்சார வாகனத்துக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

நாட்டில் ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இனி 25% வரி விதிக்கப்படும். நாட்டில் உள்ள 99.3%  நிறுவனங்கள் 25% வரி வரம்புக்குள் வருகின்றன என்று தெரிவித்தார்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரி விதிப்பு முறைகள் தளர்த்தப்படுகின்றன என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT