இந்தியா

தெலங்கானாவில்.. சிறந்த தாசில்தார் விருது பெற்றவரின் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம், நகை!

DIN


ஹைதராபாத்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாநிலத்தின் சிறந்த தாசில்தார் என்ற விருது பெற்றவர்கள் லாவண்யா. இன்று இவரது வீட்டில் நடந்த அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், தொடர்ந்து கண்காணித்து, லாவண்யாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் வரவே, அவரது ஹைதராபாத் வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். லாவண்யா மீதான சந்தேகப் பார்வையில் எந்த தவறும் இல்லை என்பதை அவரது வீட்டில் கட்டுக் கட்டாக இருந்த ரூபாய் நோட்டுகளில் சிரித்துக் கொண்டிருந்த காந்தியின் படம் உணர்த்தியது.

ரூ.93.5 லட்சம் ரொக்கப் பணமும், 400 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

விவசாயியின் நிலத்தின் பத்திரத்தில் சிறு திருத்தம் மேற்கொள்ள லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்ட விவகாரத்தில், விவசாயி கொடுத்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லாவண்யா கைது செய்யப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகள் இல்லாமல், அவரது 9 வங்கிக் கணக்குகளுக்கான வங்கிப் புத்தகங்கள், 45 விதமான சொத்துக்களை வாங்கி சேர்த்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

நிலத்துக்கான பத்திரங்களை பிடுங்கி வைத்துக் கொண்டு, லஞ்சம் கொடுத்தால்தான் அதனை தருவேன் என்று லாவண்யா லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முன்னதாக, தனது நிலப்பத்திரத்தைக் கேட்டு விவசாயி ஒருவர், லாவண்யாவின் காலில் விழுந்து கதறி அழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலான போதே, லஞ்ச ஒழிப்புத்துறையினர், லாவண்யாவைக் கண்காணிக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT