இந்தியா

ஆகஸ்ட் 7 வரை நீட்டிக்கப்படுகிறதா நாடாளுமன்றக் கூட்டத்தொடர்? 

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரையில் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

DIN

புது தில்லி: தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரையில் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெற்று முடிந்த தேர்தலுக்கு பின் நாடாளுமன்றம் ஜூன் 17-ஆம் தேதியன்று முதன்முறையாக கூடியது.  அந்த கூட்டத்தொடர் ஜூலை 26-ம் தேதி முடியும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசு நிறைவேற்ற விரும்பும் முக்கிய மசோதாவான முத்தலாக் தடை மசோதா அவசர சட்டமாக நிறைவேற்றப்பட்டு காலாவதியாகியுள்ளது. தற்போது அதனை நிறைவேற்றி விட பாஜக தீவிரம் காட்டுகிறது. அதன் முதல்கட்டமாக மக்களவையில் மசோதா வியாழனன்று நிறைவேற்றியுள்ளது.

அடுத்து அதனை மாநிலங்களவையிலும்  அறிமுகப்படுத்தி நிறைவேற்றி விட வேண்டும் என்று மத்திய அரசு ஆர்வம் காட்டுவதால், கூட்டத்தொடரை ஆகஸ்ட் 7-ம் தேதி வரையில் நீட்டிக்கலாம் என தில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உழவர் நல சேவை மையங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்: டிசம்பரில் தொடக்கம்

தென்காசி ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

கோவில்பட்டியில் தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண்கள் தா்னா

தமிழ் சமூகத்தின் வரலாற்று ஆய்வை மேற்கொள்ள மாதம் ரூ.50,000 உதவித்தொகை: அமைச்சா் கோவி.செழியன்

SCROLL FOR NEXT