இந்தியா

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் ஜூன் 8-இல் துவக்கம் 

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்னர் பிரதமர் மோடி முதல் தடவையாக  வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்.

DIN

புது தில்லி: இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்னர் பிரதமர் மோடி முதல் தடவையாக  வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்.

இதுதொடர்பாக வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே  உறுதி செய்து வெளியிட்டுள்ள பயணத்திட்டம் பின்வருமாறு:

ஜூன் எட்டாம் தேதி மாலத்தீவுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி,  அதைத் தொடர்ந்து ஒன்பதாம் தேதி இலங்கைக்கு  செல்கிறார்.

மாலத்தீவு மற்றும் இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பதியில் சாமி கும்பிடுவதற்காக பிரதமர் மோடி  திருப்பதி வருகிறார்.  அதையடுத்து  ரேணிகுண்டா சென்று தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்னர் பிரதமர் மோடி முதல் தடவையாக   மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதேசிக்கு முன்னுரிமை: ‘ஜோஹோ’ மின்னஞ்சலுக்கு மாறினாா் அமித் ஷா

கைலாசகிரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

வாக்குத் திருட்டு: கையொப்பப் பிரசாரத்தில் இணைய குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு தேவேந்தா் யாதவ் கடிதம்

எம்பிபிஎஸ் கலந்தாய்வு: 200 இடங்கள் அதிகரிப்பு

பசுமை பட்டாசுகள் சிறிதளவில் தீமை விளைவிக்கும் - நிபுணா்கள் கருத்து

SCROLL FOR NEXT