இந்தியா

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் ஜூன் 8-இல் துவக்கம் 

DIN

புது தில்லி: இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்னர் பிரதமர் மோடி முதல் தடவையாக  வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்.

இதுதொடர்பாக வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே  உறுதி செய்து வெளியிட்டுள்ள பயணத்திட்டம் பின்வருமாறு:

ஜூன் எட்டாம் தேதி மாலத்தீவுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி,  அதைத் தொடர்ந்து ஒன்பதாம் தேதி இலங்கைக்கு  செல்கிறார்.

மாலத்தீவு மற்றும் இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பதியில் சாமி கும்பிடுவதற்காக பிரதமர் மோடி  திருப்பதி வருகிறார்.  அதையடுத்து  ரேணிகுண்டா சென்று தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்னர் பிரதமர் மோடி முதல் தடவையாக   மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT