முகப்பு
இந்தியா

பிரதமர் மோடியுடன் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் திடீர் சந்திப்பு

மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், பிரதமர் நரேந்திர மோடியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

Updated On : 6 ஜூன், 2019 at 2:37 PM
பகிர்:


புது தில்லி: மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், பிரதமர் நரேந்திர மோடியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் டிவிட்டர் பக்கத்தில், மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத், பிரதமர் மோடியுடன் சந்திப்பு என்று புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் சமயத்தில் ரூ.281 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் மத்தியப் பிரதேச முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மோடியுடனான இந்த சந்திப்பு முக்கியத்தும் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.