முகப்பு
இந்தியா

துபையில் பேருந்து விபத்து: உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:06 AM
பகிர்:

துபை: துபையில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

31 பயணிகளுடன் ஓமனில் இருந்து வந்த பேருந்து சாலையோரம் இருந்த தடுப்பில் மோதியதில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

துபையில் ஐ ரஷிதியா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே பேருந்துகள் நுழைவதற்கு வசதி இல்லா குறுகிய சாலையில் நுழைந்த ஆம்னி பேருந்து, சாலையோரம் இருந்த பெயர்ப் பலகையில் வேகமாக மோதியதில் பேருந்தில் இருந்த 17 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

பலியானவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

பேருந்தில் 31 பேர் இருந்தனர். பேருந்து குறுகிய சாலைக்குள் நுழைந்த போது, பக்கவாட்டில் இருந்த தடுப்பில் மோதிய போது, பேருந்தின் வலது பக்கம் முழுமையாக சேதம் அடைந்தது. இதில் வலது பக்கம் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த ராஜகோபாலன், பெரோஸ் கான் பதான், ரேஷ்மா பெரோஸ் கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன் அரக்கவீட்டில், கிரண் ஜான்னி, வாசுதேவ், திலக்ராம் ஜவகர் தாகூர், உம்மர் சோனோகடவத், அவரது மகன் நபில் உம்மெர் என்பது தெரிய வந்துள்ளது.

ரஷீத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 இந்தியர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →