இந்தியா

குருவாயூர் கோயிலில் துலாபாரம் செலுத்தினார் மோடி: எடைக்கு எடை என்ன கொடுத்தார் தெரியுமா?

கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.

ANI


குருவாயூர்: கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.

கோயிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கிருஷ்ணர் கோயில் குருக்கள் சிறப்பான கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

இன்று காலை கொச்சியில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் வந்த பிரதமர் மோடி, கோயிலுக்குச் சென்று கிருஷ்ணரை தரிசனம் செய்தார்.

கோயிலில் எடைக்கு எடை துலாபாரம் கொடுத்தார். அவரது எடைக்கு எடையாக தாமரை மலர்களை கோயிலுக்கு பிரதமர் மோடி வழங்கினார். கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த மலராகவும், அதே சமயம் பாஜகவின் சின்னமாகவும் அமைந்த தாமரை மலர்களை தனது எடைக்கு நிகராக வழங்கியுள்ளார் மோடி.

பிறகு அபினந்த சபாவில் நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். பிரதமராக பதவியேற்றுக் கொண்ட பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் கட்சிக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழிவில் ஜனநாயகம்! ஆட்சியில் இருக்கும் சக்திகளே காரணம்! -எழுத்தாளர் சாரா ஜோசப்

சாலையில் கிடந்த 20 பவுன் நகை! காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு குவியும் பாராட்டுகள்!

டி20 உலகக் கோப்பை: மீண்டும் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளிக்க காத்திருக்கிறதா அமெரிக்கா?

ஜிஎஸ்கே பார்மா 3வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

கனடாவில் இந்திய ஐ.டி. ஊழியர் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT