ஜூன் 30க்குள் பாகிஸ்தானியர்கள் தங்களது சொத்துக்களை அறிவிக்க வேண்டும்: இம்ரான் கான்
பாகிஸ்தான் அரசு அறிவித்திருக்கும் வரி மன்னிப்பு திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, பாகிஸ்தானியர்கள் அனைவரும் ஜூன் 30ம் தேதிக்குள் தங்களது சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு அறிவித்திருக்கும் வரி மன்னிப்பு திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, பாகிஸ்தானியர்கள் அனைவரும் ஜூன் 30ம் தேதிக்குள் தங்களது சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
2019 - 20ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாளை அறிவிக்கப்படும் என்று கூறிய இம்ரான் கான், நாட்டின் நிதிநிலை மிகவும் மோசமாக இருக்கிறது. எனவே, இதுவரை அறிவிக்காத சொத்துக்களை ஜூன் 30ம் தேதிக்குள் அறிவித்து, வரி செலுத்தி நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுமாறு வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் சிறந்த நாடாக மாற வேண்டும் என்றால், நாம் நம்மையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறியிருக்கும் இம்ரான் கான், நாம் வரி கட்டாவிட்டால், நமது நாட்டை முன்னேற்ற முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஜூன் 30ம் தேதிக்குப் பிறகு இந்த வாய்ப்பு கிடைக்காது என்றும் அவரி தெரிவித்துள்ளார்.