முகப்பு
இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ மேஜர் உயிரிழப்பு 

காஷ்மீரில் திங்களன்று பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த சண்டையில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிந்தார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:16 AM
பகிர்:

ஸ்ரீநகர்: காஷ்மீரில் திங்களன்று பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த சண்டையில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிந்தார்.

ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம் அசாபால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட பகுதியைச் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினார்கள். இதனால் இருதரப்புக்கும்  இடையே சண்டை வெடித்தது.

Advertisement

இந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு தொடர்ந்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments