காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருக்க வேண்டும்: பிரம்பெடுக்கும் யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேசத்தில் காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் அரசு அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
லக்னௌ: உத்தரபிரதேசத்தில் காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் அரசு அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் காலை 9 மணிக்கு சரியாக அலுவலகம் வரவேண்டும். அவ்வாறு சரியாக வரவில்லை என்றால் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும்.
Advertisement
Advertisement
அதேபோல மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரையில் தங்கள் அலுவலகத்தில் பொதுமக்களைச் சந்திக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு போடும் அதே சமயம் மாலை எப்போது நாங்கள் வீட்டுக்கு செல்லலாம் என்பதையும் அரசு அறிவிக்க வேண்டும் என அவர்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.