முகப்பு
இந்தியா

பயங்கரவாதிகளுக்கு அன்பு எனும் மொழி புரியாததால்தான் சிவத் தாண்டவம்: ஒரு முதல்வரின் பேச்சு

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ரூ.131 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்களை துவக்கி வைத்துப் பேசினார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

Updated On : 5 மார்ச், 2019 at 12:17 PM
பகிர்:


கோராக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ரூ.131 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்களை துவக்கி வைத்துப் பேசினார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

அப்போது அவர் கூறியதாவது, பயங்கரவாதிகளுக்கு அன்பு எனும் மொழி புரியாததால், இந்திய வீரர்கள் அதிரடித் தாக்குதல் எனும் சிவ தாண்டவத்தை ஆட நேரிட்டது.

உண்மையில், இந்திய விமானப் படை நடத்திய அதிரடித் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் உண்மையை பாகிஸ்தான் மறைக்கிறது.

Advertisement

வரும் மக்களவைத் தேர்தலில் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானால் உலகின் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் 3 இடங்களுக்குள் இந்தியா வரும் என்று தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சியில் காங்கிரஸ் ஆட்சியின் போது 11வது இடத்தில் இருந்த இந்தியா, மோடி ஆட்சியின் போது 6வது இடத்துக்கு வந்திருப்பதையும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுப் பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.