பயங்கரவாதிகளுக்கு அன்பு எனும் மொழி புரியாததால்தான் சிவத் தாண்டவம்: ஒரு முதல்வரின் பேச்சு
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ரூ.131 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்களை துவக்கி வைத்துப் பேசினார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
கோராக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ரூ.131 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்களை துவக்கி வைத்துப் பேசினார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
அப்போது அவர் கூறியதாவது, பயங்கரவாதிகளுக்கு அன்பு எனும் மொழி புரியாததால், இந்திய வீரர்கள் அதிரடித் தாக்குதல் எனும் சிவ தாண்டவத்தை ஆட நேரிட்டது.
உண்மையில், இந்திய விமானப் படை நடத்திய அதிரடித் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் உண்மையை பாகிஸ்தான் மறைக்கிறது.
Advertisement
Advertisement
வரும் மக்களவைத் தேர்தலில் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானால் உலகின் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் 3 இடங்களுக்குள் இந்தியா வரும் என்று தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியில் காங்கிரஸ் ஆட்சியின் போது 11வது இடத்தில் இருந்த இந்தியா, மோடி ஆட்சியின் போது 6வது இடத்துக்கு வந்திருப்பதையும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுப் பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.