இந்தியா

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது 

ANI

ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான யாசின் மாலிக் பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து யாசின் மாலிக் உள்ளிட்ட காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பினை மத்திய அரசு விலக்கிக் கொண்டது.

அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 2-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு கோதிபாஹ் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அத்துடன் 26-ஆம் தேதி அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் தேசிய விசாரனை ஆணையம் சோதனைகளை நடத்தியது.

இந்நிலையில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான யாசின் மாலிக் பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக யாசின் மாலிக்கின் கட்சியான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

யாசின் மாலிக் அவர்கள் கடுமையான சட்டப்பிரிவான பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு தன்னிச்சையான கைது நடவடிக்கையாகும். 

அவர் தற்போது ஜம்முவில் உள்ள கோட் பல்வால் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT