இந்தியா

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் பிரச்னைக்குரியது

DIN


இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது இந்தியாவுக்கு சவாலான பிரச்னைதான்; எனினும் சீனாவின் நடவடிக்கைகளை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று கடற்படை தளபதி சுனில் லாம்பா தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக 4 நாள் பிரிட்டன் சென்றுள்ள கடற்படை தளபதி சுனில் லாம்பா, லண்டனில் நடைபெற்ற இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பங்களிப்பு குறித்த கருத்தரங்கில் உரையாற்றினார். அங்கு அவர் கூறியதாவது: இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கப்பல்கள் கட்டுவதில் சீனா அதிக அளவு செலவிட்டு வருகிறது. சீனாவை போல மற்ற எந்த நாடுகளும் கப்பல் கட்டுவதற்காக செலவிடுவதில்லை. இந்தியப் பெருங்கடலின் வடக்கு பகுதியில் எந்நேரமும் சீனாவின் 6-8 கப்பல்களும், நீர்மூழ்கி கப்பல்களும் காணப்படுகின்றன. இது இந்தியாவுக்கு சவாலான பிரச்னைதான். எனினும் சீனாவின் நடவடிக்கைகளை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 
கடல்சார் பாதுகாப்பில், இந்தியா-பிரிட்டன் இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுப்பெற்றுள்ளது. இந்தியா-பிரிட்டன் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் கொங்கன் கடல்சார் பயிற்சியினால் இருநாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்பட்டுள்ள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும், கொங்கன் கடல்சார் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய கப்பல் வரவுள்ளது. கடல்சார் பாதுகாப்பில் இரு நாடுகளிடையே கருத்தொற்றுமை உள்ளது. 
அதுமட்டுமன்றி, இரு நாடுகளின் கடற்படைக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. பொதுவான இலக்கு, எதிர்கால பாதுகாப்பு குறித்த தெளிவான பார்வை, கப்பல் கட்டும் திட்டங்கள், கடல்சார் பாதுகாப்பில் புத்தாக்க திட்டங்கள் அனைத்திலும் இரு நாடுகளும் ஒரே பாதையில் பயணிக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT