இந்தியா

மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

DIN



மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலம் இன்று மாலை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 34 பேர் காயமடைந்திருப்பதாகவும் மும்பை போலீஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

இதில், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்பு படை அந்தேரியில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். தற்போது மீட்பு பணி அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். 

இதனால், அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.  


புகைப்படங்கள்: ஏஎன்ஐ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT