இந்தியா

நடிகர் பவன் கல்யாண் கட்சியில் இணைந்த சகோதரர்!

DIN

தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் கட்சியில் அவரது சகோதரர் இணைந்துள்ளார். மேலும் அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திர சூப்பர்ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி கடந்த 2008-ஆம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் எனும் கட்சி துவங்கி தேர்தலை சந்தித்தார். அப்போது அவருக்கு ஆதரவாக இரு சகோதரர்களான பவன் கல்யாண் மற்றும் நாகேந்திர பாபு ஆகியோர் பிரசாரம் செய்தனர். பின்னர் 2012-ஆம் ஆண்டு அவருடைய கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். இதையடுத்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். 

இந்நிலையில், நடிகர் பவன் கல்யாண் ஜன சேனா என்ற புதுக்கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் தற்போது நடைபெறவுள்ள ஆந்திர மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம்காண்கிறார். 

இதையடுத்து அவருடைய சகோதரர்களில் ஒருவரான நாகேந்திர பாபு, ஜன சேனா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். மேலும் அவர் மக்களவைத் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் தனக்கு அரசியல் மீது ஆர்வம் ஏற்படுத்தியவர் நாகேந்திர பாபு தான் என பவன் கல்யாண் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT