இந்தியா

கர்நாடகாவில் அதிசயம்: 72 மணி நேரத்துக்குப் பின் கட்டட விபத்தில் உயிரோடு மீட்கப்பட்ட தம்பதி

கர்நாடக மாநிலம், தார்வாடில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 72 மணி நேரத்துக்குப் பிறகு கணவன் - மனைவி உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.

DIN

கர்நாடக மாநிலம், தார்வாடில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 72 மணி நேரத்துக்குப் பிறகு கணவன் - மனைவி உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மதியம் 3.30 மணிக்கு கட்டடம் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புப் படையினர், வெள்ளிக்கிழமை மதியம் 3.15 மணிக்கு கணவன் - மனைவியை உயிரோடு மீட்டுள்ளனர்.

உடனடியாக அவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக கட்டட விபத்து: மதிய உணவுக்கு சற்று தாமதமானதால் உயிரை இழந்த தந்தை-மகன்

தார்வாட் குமரேஸ்வரநகரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 5 மாடிக் கட்டடம், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்ததில் கீழ்மாடியிலிருந்த கடைகள், ஹோட்டல்கள் உள்பட கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலை வரை 14 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. காயமடைந்த 65-க்கும் மேற்பட்டவர்களும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பலர் இடிப்பாடுகளில் சிக்கி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

திருப்பூர்: போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை கைது!

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

SCROLL FOR NEXT