சென்னை: பொதுத் துறை வங்கிகளில் நீண்டகாலமாக 36 இயக்குநர்களுக்கான பதவிகள் காலியாகவே இருப்பதாக வங்கி ஊழியர்களுக்கான சங்கத்தின் முக்கிய தலைவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து இந்திய வங்கி ஊழியர்களுக்கான சங்கத்தின் பொதுச் செயலர் சி.எச். வெங்கடாசலம் கூறுகையில், பொதுத் துறை வங்கிகளில் 36 இயக்குநர்களுக்கான பணி இடங்கள் வெகு காலமாக நிரப்பப்படாமலேயே உள்ளது.
சமீபத்தில் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத நபர்களின் பட்டியலை உச்ச நீதிமன்றம் ஆர்பிஐயிடம் கேட்டுள்ளது. இதனைத் தயாரிப்பது ஒவ்வொரு வங்கியின் இயக்குநரின் வேலை. ஆனால், வங்கிகளுக்கு போதிய அவகாசம் அளிக்கப்படாமல், இது குறித்து அறிக்கை தருமாறு கேட்கும் பொழுது சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்தார்.