இந்தியா

பாலியல் குற்றச்சாட்டு: விசாரணைக் குழு முன் தலைமை நீதிபதி ஆஜர்

DIN


முன்னாள் பெண் ஊழியர் அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்காக, நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான குழு முன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் புதன்கிழமை ஆஜரானார். மூடப்பட்ட அறையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக, நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் தெரிவித்த பாலியல் புகாரை விசாரிப்பதற்கு ரஞ்சன் கோகோய்க்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் பெண் நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
அந்த புகார் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ரஞ்சன் கோகோய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, விசாரணைக் குழு முன் அவர் புதன்கிழமை ஆஜரானார். அவரிடம் மூடப்பட்ட அறையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின்போது போதுமான அளவுக்கு அவர் பதிலளித்தார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT