இந்தியா

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு புதிய விமானப்படை தளபதி!

DIN

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிய விமானப்படை தளபதி நியமிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

தற்போதைய விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோவா பதவிக்காலம் முடிவடைய இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ளது. தற்போது நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் உடனடியாக புதிய தளபதி நியமிக்க வாய்ப்பில்லாத காரணத்தால், புதிய அரசு பதவியேற்றதுடன் இம்முடிவு அறிவிக்கப்படவுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

முப்படைகளிலும் பொதுவாக பழைய தளபதிகளின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே அடுத்த தளபதி அறிவிக்கப்படும் காலகட்டமாகும். ஆனால் இம்முறை தேர்தல் நடைபெறும் சூழல் காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் ராணுவத்திலும் பல அதிகாரிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பதவி உயர்வு முறையில் இந்த அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT