காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு திருமணமே நடக்காது என்று கர்நாடக பாஜக மூத்த தலைவர் சாபம் விட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நேற்று நடந்த பிரசாரத்தின் போது பாஜக மூத்தத் தலைவர் ஈஸ்வரப்பா பாஜக தொண்டர்கள் முன்னிலையில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலுக்கு அவரது வாழ்நாளில் திருமணமே நடக்காது. அதுபோல மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் சித்தராமையா தனது வாழ்நாளில் மீண்டும் முதல்வராகவே முடியாது என்று பேசியிருந்தார்.
அரசியலில் அரசியல் தொடர்பாக எதிர்கட்சியினரை பல்வேறு வகையில் விமரிசிக்கலாம். ஆனால் தனிப்பட்ட ரீதியில் ராகுலை ஈஸ்வரப்பா விமரிசித்திருப்பது காங்கிரஸ் கட்சியனருக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.