இந்தியா

மம்தா மீது பாஜக வேண்டுமென்றே வெறுப்புணர்வை தூண்டுகிறது: மாயாவதி குற்றச்சாட்டு

PTI

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாஜக வேண்டுமென்றே வெறுப்புணர்வை தூண்டுவதாக உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக லக்னோவில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மேலும் கூறியதாவது:

நடப்பு தேர்தல் ஆணையர் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்படுவது மேற்கு வங்க விவகாரம் மூலம் அம்பலமாகியுள்ளது. நாடு முழுவதிலும் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் செயல்படாமல் உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தன்மீதான தவறுகளை மறைப்பதற்காகவே மேற்கு வங்கத்தில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை கட்டவிழ்த்துள்ளார். மோடி கலந்துகொள்ளும் பிரசாரங்கள் இருப்பதாலேயே மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு இரவு வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் காலை முதலே பிரசாரங்களை முடக்கியிருக்க வாய்ப்புள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மீது இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் மூலம் பாஜக வெறுப்புணர்வை தூண்டுகிறது என்று குற்றம்சாட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

வெள்ளை டீ-ஷா்ட் ரகசியம்? ராகுல் விளக்கம்

SCROLL FOR NEXT