இந்தியா

உலகின் அதிஉயரமான வாக்குச்சாவடி!

ஹிமாசலப் பிரதேச மாநிலம், தஷிகாங் என்ற கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிதான் உலகின் மிக உயரமான பகுதியில் உள்ள

DIN


சிம்லா: ஹிமாசலப் பிரதேச மாநிலம், தஷிகாங் என்ற கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிதான் உலகின் மிக உயரமான பகுதியில் உள்ள வாக்குச்சாவடியாகும்.
மக்களவை கடைசிக் கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதில், தஷிகாங் கிராமத்திலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் 49 பேர் வாக்களிக்க உள்ளனர்.
ஹிமாசலப் பிரதேச தேர்தல் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "தஷிகாங் வாக்குச்சாவடி கடல்மட்டத்திலிருந்து 15,256 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தஷிகாங் அருகே உள்ள ஹிக்கிம் வாக்குச்சாவடிதான் இதற்கு முன்பு உலகின் உயரமான இடத்தில் உள்ள வாக்குச்சாவடியாக இருந்தது. 2017 சட்டப்பேரவைத் தேர்தலின்போது சில தொழில்நுட்பக் காரணங்களால் தஷிகாங்குக்கு வாக்குச்சாவடி மாற்றப்பட்டது. ஹிமாசலில் மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடி கின்னௌர் மாவட்டத்தில் உள்ளது. கா என்றழைக்கப்படும் அந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 17 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT