இந்தியா

பிரக்யா மீதான கொலை வழக்கு: மீண்டும் விசாரிக்க ம.பி. அரசு முடிவு

DIN


மத்தியப் பிரதேசம், போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரக்யா சிங் தாக்குர், தேர்தலில் வெற்றி பெறுவார் என்று வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவித்த நிலையில், பிரக்யா மீதான கொலை வழக்கை 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விசாரிக்க மத்தியப் பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு தேவாஸ் மாவட்டத்தில் முன்னாள் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் சுனில் ஜோஷி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரக்யா உள்பட 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள், சரியான ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்படாததால், அந்த வழக்கில் இருந்து கடந்த 2017-ஆம் ஆண்டு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளதாக மத்தியப் பிரதேச சட்ட அமைச்சர் பி.சி. சர்மா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்திலும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT