இந்தியா

தீயிட்டு கொளுத்தப்பட்ட போலீஸ் வாகனம்: நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், போலீஸார் இடையே மோதல்!

DIN


தில்லி திஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், போலீஸார் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸார் வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

தில்லி திஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனத்தை நிறுத்தும் விஷயத்தில் வழக்கறிஞர்கள் சிலர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த வாக்குவாதம் பின்னர் மோசமடைந்ததாக சம்பவத்தை நேரில் பார்வையிட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மோதலுக்கு இடையே போலீஸ் வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இந்த மோதலில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் வழக்கறிஞர் ஒருவர் காயமடைந்ததாகவும் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இந்த சம்பவத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், திஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகம் பரபரப்புக்குள்ளானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT