இந்தியா

கபிலேஸ்வரர் கோயிலில் சுப்பிரமணியர் திருக்கல்யாணம்

DIN

கந்த சஷ்டியையொட்டி, திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சனிக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
 திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில், கடந்த மாத இறுதி முதல் கார்த்திகை மாத மகோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை சுப்ரமணிய சுவாமி ஹோமம் நடைபெற்றது. மகாபூர்ணாஹுதியுடன் இந்த ஹோமம் சனிக்கிழமை மாலை நிறைவுற்றது. இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரை வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை கோயிலில் நவகிரஹ ஹோமம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT