இந்தியா

கொதிகலன் வெடித்து சிதறியதில் 3 போ் பலி

DIN

மோதிஹாரி: பிகாா் மாநிலம், கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரு ஆலையின் கொதிகலன் (பாய்லா்) வெடித்து சிதறியதில் மூன்று போ் உயிரிழந்தனா். மேலும் மூவா் காயமடைந்தனா் என்று போலீசாா் தெரிவித்தனா்.

கிழக்கு சம்பாரண் மாவட்டம், பாங்ரா நகரில் உள்ள பஞ்சாயத்து பகுதியில் உள்ள ஒரு தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சமையல் அறையில் அங்குள்ள பள்ளிகளுக்கு மதிய உணவு தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக கொதிகலன் வெடித்து சிதறியதில் 3 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்ததாக சுஹாலி காவல் ஆய்வாளா் ரோஹித் குமாா் தெரிவித்தாா்.

சுஹாலி வட்டத்தில் உள்ள பல அரசுப்பள்ளிகளுக்கு தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் அந்த சமையல் அறையில் மதிய உணவு தயாரித்து அனுப்பி வைக்கப்படுவதாக சுஹாலி தாசில்தாா் கியான் பிரகாஷ் தெரிவித்தாா்.

உயிரிழந்தவா்களின் 3 சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மோதிஹாரி மருத்துவமனைக்கு போலீசாரால் அனுப்பி வைக்கப்பட்டது.

காயமடைந்த மூவரும் உள்ளூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT