Currency rain from 6th floor of Kolkata office 
இந்தியா

கொல்கத்தாவில் கொட்டிய பணமழை: ஜன்னல் வழியாக வீசப்பட்ட 2000, 500, 100 ரூபாய் நோட்டுகள்

ஒரு அடுக்குமாடியின் 6வது தளத்தில் இருந்த தனியார் நிறுவனத்தில் நடைபெறவிருந்த சோதனைக்கு பயந்து, கத்தைக் கத்தையாக ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ENS


கொல்கத்தா: ஒரு அடுக்குமாடியின் 6வது தளத்தில் இருந்த தனியார் நிறுவனத்தில் நடைபெறவிருந்த சோதனைக்கு பயந்து, கத்தைக் கத்தையாக ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை மதியம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவ்வழியாகச் சென்றவர்கள், வானத்தில் இருந்து பணமழைப் பொழிவதைப் பார்த்து அதிர்ச்சியும், அதே சமயம் ஆனந்தமும் அடைந்தனர்.

மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அந்த கட்டத்தின் 6வது தளத்தில் இயங்கி வந்த ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனத்தில், வரி மோசடி நடப்பதை அறிந்து, அங்கு சோதனையில் ஈடுபடச் சென்றனர்.

அப்போது நிறுவனத்தில் இருந்த கணக்கில் வராத பணத்தை என்ன செய்வது என்று தெரியாத நிர்வாகத்தினர், பணத்தை ஜன்னல் வழியாக வெளியே கொட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வருவாய் புலனாய்வுப் பிரிவு சோதனைக்கும், இந்த பணமழைக்கும் தொடர்பிருக்கிறதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

என்னவாக இருந்தாலும், அந்த கட்டத்தின் கீழே நடந்து சென்றவர்களுக்கு நேற்று கொண்டாட்டம்தான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT