திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் மகன் கார்த்தி சிதம்பரம், சசி தரூர் சந்திப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த மாதம் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்துடன், காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர், ப.சிதம்பரத்தை தில்லியில் உள்ள திகார் சிறையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர்.